கடனை அடைக்க நண்பனின் கழுத்தில் கத்தி வைத்த நட்பு.. கடலூரில் பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


பண்ருட்டியில் முந்திரி தொழிலில் நஷ்டமடைந்த ஒருவர், தனது நண்பனை கத்தியால் தாக்கி 50 இலட்சம் ரூபாயை பறித்த சம்பவம் நடந்துள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். அதே பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர்கள் இருவரும் முந்திரி தோப்பு வைத்துள்ள நிலையில், நண்பர்களாக இருந்துள்ளனர். 

இவர்களில் கலைச்செல்வனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், அவ்வப்போது வடிவேலு உட்பட பலரிடம் கடனாக கலைசெலவன் பணம் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடன்சுமை அதிகரித்த நிலையில், வடிவேலு முந்திரி உற்பத்தியில் நல்ல லாபம் ஈட்டி வசதியாக இருப்பதை கண்ட கலைச்செல்வன், அவரிடம் இருந்து பணம் பறிக்கும் திட்டமிட்டிருக்கிறார். 

கடந்த சனிக்கிழமை வடிவேலை முந்திரித்தோட்டத்திற்கு அழைத்துச் சென்ற கலைச்செல்வன், திடீரென கழுத்தில் கத்தியை வைத்து ரூபாய் 50 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத வடிவேல் பணம் தரமுடியாது என்று கூறவே, வடிவேலுவை அச்சுறுத்துவதற்காக கழுத்தில் லேசாக கத்தியால் கிழித்து உள்ளார். 

இதனால் பயந்துபோன வடிவேலு குடும்பத்தினரை செல்போன் மூலமாக அழைத்து 50 லட்சம் ரூபாய் பணம் எடுத்துக் கூறி இருக்கிறார். பணம் கைக்கு வந்ததும் கலைச்செல்வன் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், வடிவேலுவை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்த நிலையில், புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் திங்கட்கிழமை அதிகாலை காட்டுக்கூடலூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் கலைச்செல்வன் சிக்கி இருக்கிறான். அவனிடம் இருந்த 43 லட்சத்து 68 ஆயிரத்து 350 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. உடன் பழகிய நண்பனே நண்பனை பணத்திற்காக கொலை செய்ய முயற்சித்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Panruti Friend Murder Attempt due to Money 28 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->