காதல் திருமணம் செய்த பெண் 10 மாதத்தில் தற்கொலை.. காவல் நிலையத்தில் பெண்ணின் சகோதரர் பரபரப்பு புகார்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி மேலபுதுப்பேட்டை கிராமத்தை சார்ந்தவர் ராஜதுரை (வயது 29). ராஜதுரை சிதம்பரத்தில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். வடலூரில் உள்ள ஆபத்தானபுரம் திருவள்ளுவர் நகர் பகுதியை சார்ந்தவர் ஜெயந்திமாலா (வயது 29). 

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 10 மாதத்திற்கு முன்னதாக இருதரப்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளார். கணவன் - மனைவிக்கிடையே குடும்பம் தொடர்பான பிரச்சனை இருந்ததாக கூறப்படும் நிலையில், நேற்று ஜெயந்திமாலா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 

இந்த தகவல் ராஜதுரை வீட்டார் சார்பாக ஜெயந்திமாலாவின் சகோதரர் வாஞ்சிநாதனுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், வாஞ்சிநாதன் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், " எனது தங்கை ஜெயந்திமாலாவை ராஜதுரை கடந்த 10 மாதத்திற்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்தார். 

கடந்த சில நாட்களாக வரதட்சணை கேட்டும், தற்போது வரை குழந்தைக்கான அறிகுறி இல்லை என்று கூறியும் மாப்பிள்ளை வீட்டார் பிரச்சனை செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தற்போது எனது தங்கை தற்கொலை செய்ததாக தெரிவிக்கின்றனர். எனது தங்கையை அவர்கள் கொலை செய்து நாடகம் ஆடுகிறார்கள். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் " என்று கூறியுள்ளார்.

இது தொடர்பான புகாரை ஏற்ற குறிஞ்சிப்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஜெயந்திமாலா எதனால்? தற்கொலை செய்துகொண்டார் என்பது தொடர்பாகவும் விசாரணை செய்து வருகின்றனர். திருமணம் முடிந்து 10 மாதங்கள் மட்டுமே ஆவதால், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீசனும் விசாரணை செய்து வருகிறார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Kurinjipadi Woman JayanthiMala Suicide Love Marriage Police Investigation 26 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->