போதையில் பெண்களிடம் சில்மிஷம்.. கரண்டு கம்பத்தில் கட்டிவைத்து தோலை உரித்த பொதுமக்கள்.!
Cuddalore Kattumannarkoil Culprit Sexual Torture for Woman Peoples Attack
காட்டுமன்னார்கோவில் பகுதியில் இரவு நேரத்தில், மது போதையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபரை கரண்டு கம்பத்தில் கட்டி வைத்து மக்கள் வெளுத்தெடுத்தனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியை சார்ந்தவன் சரவணன். இவன் இரவு நேரமாகிவிட்டால் மது அருந்திவிட்டு, தெருவில் இருக்கும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவது, இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களின் பின்புறத்தை தட்டுவது என தீண்ட தகாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.
இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் பெண் ஒருவரிடம் குடிபோதையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட நிலையில், இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி இளைஞர்கள், சரவணனை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து நொறுக்கினர்.
மேலும், காமுகனால் பாதிக்கப்பட்ட பெண்களை வைத்தே செருப்பால் அடிக்கவிட்ட நிலையில், இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இளைஞர்களிடம் இருந்து காமுகன் சரவணனை மீட்க முயற்சித்தபோது, இளைஞர்கள் சரவணனை விடாமல் நையப்புடைத்தனர்.
அப்பகுதி மக்களும் தங்களின் பங்கிற்கு வெளுத்தெடுத்த நிலையில், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி சரவணனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Cuddalore Kattumannarkoil Culprit Sexual Torture for Woman Peoples Attack