ஆசைகாட்டி சிறுமி கடத்தல்.. சேத்தியாத்தோப்பில் காமுகன் கைது.! - Seithipunal
Seithipunal


திருமண ஆசைகாட்டி சிறுமியை கடத்திய காமுகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் போவேந்தனல்லூர் பகுதியை சார்ந்தவன் கார்த்திகேயன் (வயது 23). இவன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறான். இதே பகுதியில், 17 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். 

இந்நிலையில், சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய கொடூரன், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளான். இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் தாயார் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, தனிப்படை அமைத்து கார்த்திகேயனை தேடி வந்தனர். இதனையடுத்து, சேத்தியாத்தோப்பில் பதுங்கியிருந்த காமுகனை கைது செய்த காவல் துறையினர், சிறுமியை மீட்டனர். பின்னர், காமுகன் கார்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Kattumannarkoil Culprit Kidnap Child girl Police Rescued at Sethiathoppu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->