6 வயது சிறுமி இரண்டு பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. காட்டுமன்னார்கோவிலில் பயங்கரம்.!! - Seithipunal
Seithipunal


காட்டுமன்னார்கோவில் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் 6 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். 

இதே பகுதியில் 13 வயது சிறுவன் மற்றும் சதீஷ்குமார் என்ற 31 வயது வாலிபர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று இவர்கள் இருவரும் சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பதாக கூறி, காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். 

சிறுமியை காட்டுப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், இது குறித்து வெளியே கூற கூடாது என்று கூறியுள்ளனர். வலியால் கதறிய சிறுமி, அழுதுகொண்டே பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்துள்ளார். 

இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, 13 வயது சிறுவன் மற்றும் சதீஷ்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Kattumannarkoil child girl sexual abuse police arrest culprits


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->