#சற்றுமுன் || அரசு பேருந்து ஓட்டுனருக்கு மயக்கம்., அரங்கேறிய கொடூர விபத்து.! பலியான உயிர்., பல பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திடீர் மயக்கம் அடைந்ததால், கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

கடலூர் மாவட்டம், சேர பாளையம் அருகே, சாலை ஓரத்தில் இருந்த குடிசை வீடு மீது அரசு பேருந்து மோதியதில், ஒருவர் பலியாகியுள்ளார். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் இருந்து கடலூர் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று,  சற்று முன்பு சேரபாளையம் பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது, பேருந்தின் ஓட்டுனருக்கு திடீரென மயக்கம் வந்தது.

ஓட்டுநர் மயக்கமடைந்த சிறிது நேரத்தில், அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த ஒரு வீட்டின் மீது பாய்ந்தது.

இந்த சாலை விபத்தில் வீட்டின் அருகே நின்றிருந்த சுப்புராயன் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வீட்டில் இருந்த நபர்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்த10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயம் அடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மயக்கமடைந்த ஓட்டுநரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Govt Bus Accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->