பெண்கொடுக்க மறுத்த தந்தை கொடூர கொலை.! ஒரு(தறு)தலை காதலன் வெறிச்செயல்.. கடலூரில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள தாழங்குடா சுனாமி நகர் பகுதியை சார்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 65). மீனவராக இருந்து வரும் சுப்பிரமணியனுக்கு, 2 மனைவி மற்றும் 2 மகள்கள், 2 மகள்கள் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு ஒரேயொரு மகள் உள்ள நிலையில், மனைவிகள் இரண்டு பெரும் இறந்துவிட்டனர். 

தற்போது, 2 ஆவது மனைவி மகளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் சுப்பிரமணியன் தேவானம்பட்டியில் இருக்கும் முதல் மனைவி மகள் வீட்டிற்கு சென்று நிச்சய செலவுக்கு ரூ.10 ஆயிரம் பணம் வாங்கி தாழங்குடா புறப்பட்டுள்ளார். 

இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாமல் இருந்து வந்த நிலையில், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில், காலை தாழங்குடா கண்டக்காடு சாலையில் சுப்பிரமணியன் பிணமாக கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், மக்களிடம் வாங்கி வந்த ரூ.10 ஆயிரம் மாயமாகியுள்ளது. 

உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இக்கொலை காதல் தகராறில் அரங்கேறியது தெரியவந்துள்ளது. சூத்துக்குளம் பகுதியை சார்ந்த 2 வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், சுப்பிரமணியன் மகளை கடந்த 5 வருடமாக வாலிபன் ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், அவருக்கு மற்றொரு நபருடன் திருமண ஏற்பாடுகள் நடந்த தகவல் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, சுப்பிரமணியனின் மகளை பெண்கேட்டு ஒருதலையாக காதலித்த வாலிபர் பிரச்சனை செய்த நிலையில், அதற்கு சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்ததால் சுப்பிரமணியனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Father Subramaniyan Murder by Drama Love Culprits Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->