கடலூர்: குற்றப்பின்னணி கொண்ட 40 ரௌடிகள் சிறையில் அடைப்பு..! காவல்துறை நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


சட்டசபை தேர்தல் தமிழகம், புதுச்சேரி மாநிலத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற்றவுள்ளது. இதனால் தேர்தல் விதிமுறைகள் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் பறக்கும்படை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள ரௌடிகளை கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

இதனையடுத்து கடலூர், பண்ரூட்டி, சிதம்பரம், விருத்தாச்சலம், சேத்தியாத்தோப்பு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள ரௌடிகளின் பட்டியல் சேகரிக்கப்பட்டு இரவோடு இரவாக 40 ரௌடிகள் கைது செய்யப்பட்டனர். முன்னதாக கடந்த வாரத்தில் 50 ரௌடிகள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore District Rowdy 50 persons Arrest by Police due to Election Rules


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->