அப்பாவால் போன் வாங்கி கொடுக்க முடியல.. என்னால படிக்க முடியாது.. நான் போறேன்.. சிறுவனின் விபரீத முடிவு.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி சிறுதொண்டமாதேவி பகுதியை சார்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் விக்னேஷ் (வயது 14). விக்னேஷ் அங்குள்ள கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். 

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த நிலையில், இணையத்தளம் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இணையத்தளம் மூலமாக படிக்க அலைபேசி வாங்கி தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். 

இதற்கு சிறுவனின் தந்தை, தன்னிடம் பணம் இல்லை என்றும், முந்திரிகளை விற்பனை செய்து பணம் வந்ததும் அலைபேசி வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனால் கடுமையான மன விரக்தியில் சிறுவன் இருந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், விக்னேஷ் தனது தாயின் சேலையால் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore child boy suicide died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->