பிறந்து 8 நாட்களே ஆன பச்சிளம் பிஞ்சு.. கயவனின் சந்தேக புத்தியால், துடிதுடிக்க மரணமடைந்த குழந்தை.! - Seithipunal
Seithipunal


மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை அடித்து கொலை செய்த கொடூரமானது அரங்கேறியுள்ளது. 

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் சக்காங்குடி கிராமத்தைச் சார்ந்தவர் ராஜீவ். இவரது மனைவி சிவரஞ்சனி. இந்த தம்பதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

பிறந்த குழந்தை மற்றும் மனைவியை மருத்துவமனைக்கு வந்த பார்த்த ராஜீவ், குழந்தை தனது முக சாயலில் இல்லை என்றும், தனக்கு குழந்தை பிடிக்கவில்லை என்றும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளான். இதன் பிறகு மருத்துவமனையில் இருந்த சிவரஞ்சனியை கூட வந்து பார்க்கக்கூடவில்லை. 

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்த சிவரஞ்சனி தாய் வீட்டுக்கு திரும்பியதும், ராஜீவ் நல்லவன் போல பாவனை செய்து அனைவரையும் நம்பவைத்து இருக்கிறான். நேற்று இரவு குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டு இருந்த சிவரஞ்சினியிடம் இருந்து குழந்தையை வாங்கிய கொடூரன், தான் பார்த்துக்கொள்வதாக கூறி இருக்கிறான். 

கணவன் என்ற நம்பிக்கையில் குழ்நதையை கொடுத்த சிவரஞ்சனி, உடல் அசதியால் படுத்து உறங்கியுள்ளார். சில நிமிடத்திலேயே வீட்டின் மின் விளக்கை அணைத்துவிட்டு, குழந்தையின் தொப்புள் கொடியை பிடித்து இழுத்து தரையில் தூக்கி அடித்து, குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளான். 

தூக்கம் தெளிந்து பார்த்த போது குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிவரஞ்சனி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து சந்தேக மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த காவல் துறையினர், ராஜீவை விசாரணை செய்கையில் மேற்கூறியுள்ள கொடூர தகவல் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Chidambaram 8 Days born baby Murder by Father due to Wife Doubts


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->