விருத்தாசலத்தில் வாலிபர் அடித்து கொலை.. காவல்துறை குவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் கருவேப்பிலங்குறிச்சி மேலப்பாளையூர் காலனி பகுதியை சார்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் ராஜி (வயது 24). இதே பகுதியை சார்ந்த ராஜியின் நண்பர்கள் வினோத்குமார் மற்றும் புகழேந்தி. இவர்கள் மூவரும் நேற்று முன்தினத்தில் இருசக்கர வாகனத்தில் சி.கீரனூர் பகுதியில் உள்ள மருந்து கடைக்கு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் ஊருக்கு புறப்பட்ட நிலையில், இரு சக்கர வாகனத்தை ராஜி இயக்கியுள்ளார்.

இந்த நேரத்தில், சி.கீரனூரை சார்ந்த தனசேகர் என்பவரின் மகன் காண்டீபன் என்பவர் ராஜியை வழிமறித்து அதிவேகமாக சாலையில் செல்வது ஏன்? என கேட்டு வாகனத்தின் சாவியை எடுத்துவிட்டதாக தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார் மற்றும் புகழேந்தி காண்டீபனுடன் தகராறு செய்துள்ளனர். இதனைக்கண்ட காண்டீபனின் ஆதரவாளர்களான சேட்டு(வயது 42), இளஞ்செழியன்(வயது 33), தனசேகரன்(வயது 55), சரண்ராஜ்(வயது 22), விஜயகுமார்(வயது 37), சசிகுமார்(வயது 38) ஆகியோர் விரைந்துள்ளனர். 

இதில் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறிய நிலையில், இந்த மோதலில் தாக்கப்பட்ட ராஜி மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து ராஜியை மீட்ட புகழேந்தி மற்றும் வினோத்குமார் அங்குள்ள விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கவே, சிகிச்சை பலனின்றி ராஜி பலியாகியுள்ளார். இதனையடுத்து மேலப்பாளையூர் மற்றும் சி.கீரனூர் இளைஞர்களுக்கு இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, பாதுகாப்பு கருதி உடனடியாக 50 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். ராஜியின் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய காண்டீபன் உட்பட 7 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cudallore Virudhachalam Youngster murder police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->