கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்மணி பாலியல் பலாத்காரம்.. காமுகனால் மனவேதனையில் துடித்து, தூக்கில் தொங்கிய பெண்மணி.!
Cudallore Virudhachalam woman sexual abuse suicide police arrest culprit
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் மணலூர் பகுதியை சார்ந்தவர் வேல்முருகன். இவர் அங்குள்ள ராஜேந்திர பட்டினம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும், மணவாளநல்லூர் பகுதியை சார்ந்த செம்பாயி (வயது 30) என்ற பெண்மணியுடன், கடந்த 9 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்துள்ளது.
இதனால் செம்பாயி கணவரை புரிந்துவிட்டு 4 வருடங்களாக மணவாளநல்லூரில் பெற்றோருடன் வசித்து வரவே, கடந்த 10 ஆம் தேதி வீட்டில் இருந்தே பெண்மணியை, அப்பகுதியை சார்ந்த விவசாயி சின்னக்குட்டி (வயது 42) என்பவன், அங்குள்ள தோட்ட பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பெண்மணியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்த நிலையில், ராஜேந்திரன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளான்.
பின்னர், இது குறித்து தனது தாயிடம் செம்பாயி கூறி அழுத்த நிலையில், தனது வாழ்க்கையே சீரழிந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது தாயார் செம்பாயிக்கு ஆறுதல் கூறிய நிலையில், மனவேதனையில் கடுமையாக செம்பாயி இருந்து வந்துள்ளார். கடந்த 11 ஆம் தேதி செம்பாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுவரை மீட்ட உறவினர்கள், அங்குள்ள முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே, சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தனக்கு நடந்த கொடூரம் குறித்து, செம்பாயி கடிதம் எழுதிவைத்துட்டு தற்கொலை செய்துள்ளார். அந்த கடிதத்தில், தனது வாழ்க்கையை சீரழித்து, தற்கொலைக்கு முக்கிய புள்ளியாக இருந்த சின்னக்குட்டியை ஆவியாக வந்து பழிவாங்குவேன் என்று எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில், காவல் துறையினர் சின்னக்குட்டியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Cudallore Virudhachalam woman sexual abuse suicide police arrest culprit