எனது கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா?.. ஹோட்டல் ஹயாத்தின் கொடூரம்.. நீதி கிடைக்காத அவலம்.!! - Seithipunal
Seithipunal


வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்பி வரும் சூழலில், இவர்கள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு, 14 நாட்களுக்கு பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவ்வாறு சிங்கப்பூரில் இருந்து தாயகம் திரும்பிய நபர் விடுதி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பலியாகி இருக்கும் சோகம் அரங்கேறியது.

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் திட்டக்குடி நதிநத்தம் கிராமத்தை சார்ந்த நபர் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நிலையில், கொரோனா காரணமாக கடந்த 25 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். இவரை அங்குள்ள ஹயாத் விடுதியில் தங்க வைத்து இருந்த நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்பின்னர், தான் வந்த விபரத்தை தனது மனைவிக்கு தெரியப்படுத்திய நிலையில், இரண்டு நாட்களாக எந்த விதமான தகவலும் இல்லை. இதனையடுத்து ஹயாத் நிர்வாகத்திடம் இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பின்னர், கணவர் இறந்த செய்தி கடுமையான அலட்சியத்துடன் மனைவிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மாரடைப்பால் பலியான நபரை பல அலட்சியத்துடன் ஹயாத் நிர்வாகம் கொலை செய்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக அந்த நபரின் மனைவி ஏற்கனவே கண்கலங்கி வீடியோ பதிவு செய்த்திருந்தார். இந்த விஷயம் தொடர்பாக தமிழக அரசு பதில் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்த நிலையில், இப்போது வரை அரசு சார்பாக எந்த அறிவிப்பும் வெளியானதாக தெரியவில்லை. இந்த நிலையில், நேற்று துக்க வீட்டில் நடைபெறும் சடங்குகள் நடைபெற்றுள்ளது. 

தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பெண்மணி மீண்டும் வீடியோ பதிவு செய்துள்ளார். இது குறித்த வீடியோ காட்சியில், " தமிழக முதல்வர் என் அழுகுரல் உங்களுக்கு கேட்கவில்லையா?.. எனது கணவர் எவ்வுளவு ஆவலுடன் என்னையும், குழந்தையையும் பார்க்க விரைந்திருப்பார். விடுதி ஹயாத் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் எனது கணவரை நான் இழந்துவிட்டேன். 

இன்றுவரை இந்த வீடியோ காட்சிகள் உங்களுக்கு கிடைக்கவில்லையா?.. பணத்திற்குத்தான் மதிப்பா? பணக்காரர்களுக்கு தான் ஆட்சி நடைபெறுகிறதா?.. ஏழைகளுக்கான ஆட்சி என்று கூறிக்கொண்டு எனது கணவரின் விஷயத்தில் எப்படிப்பட்ட அலட்சியம் அரங்கேறியுள்ளது?. எனது கணவரின் நீதிக்கு நீங்கள் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும் என்று கண்ணீருடன் வீடியோ பதிவு செய்துள்ளார்.

இனி என்னைப்போல் வேறு யாரும் பாதிக்க கூடாது என்றும், தமிழக அரசு இதற்கான செயல்முறையை நடைமுறை படுத்த வேண்டும் என்றும், ஹயாத் நிர்வாகம் தங்களின் விடுதியில் தங்கும் நபர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு இதுதானா? என்றும் பெண்மணி கண்ணீருடன் அழுது புலம்புவது காண்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்துகிறது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cudallore NRI Singapore Retrun Tamilan died Hotel Hyatt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->