போலி கணக்குகளால் பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய காமுகன்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!!
cudallore culprit arrested by police cheated girl profile
முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளத்தில் அரசியல் கட்சியுடைய தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் போலவே துவங்கப்பட்ட போலி கணக்குகள் மூலமாக பெண்களை சிக்கவைக்கும் துயரங்கள் அரங்கேறி வருகிறது.
இவ்வாறாக துவங்கப்பட்ட பல போலி முகநூல் கணக்குகளை நம்பும் இளம்பெண்களுக்கு பெரும் பிரச்சனை பின்னாட்களில் காத்துகொண்டு உள்ளது. இதனை நம்பும் இளம்பெண்கள் வெளியிடும் மற்றும் பதிவு செய்யும் புகைப்படங்களை மர்ம நபர்கள் முகநூல் மூலம் பெற்று, மாபிங் செய்து பெரும் துயரத்தை ஏற்படுத்திவிடுகின்றனர்.
மேலும், இளம்பெண்களின் புகைப்படங்கள் மாபிங் செய்யப்பட்டு, ஆபாசமாக சித்தரித்து சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி வருகின்றனர். இந்த விஷயத்தை சிலர் பணத்திற்க்காகவும், சிலர் பாலியல் பலாத்காரம் செய்யவும் உபயோகம் செய்து வருகின்றனர்.
இது தொடர்பான தொடர் வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு வந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் பகுதியை சார்ந்த விக்னேஷ் (வயது 23) என்ற வாலிபன் கைது செய்யப்ட்டுள்ளான்.
இவனிடம் மேற்கொண்ட விசாரணையில், போலியான பிரபலங்களின் சமூக வலைதளப்பக்கத்தில் கணக்குகளை துவங்கி, இளம்பெண்களை சிக்கவைத்து மிரட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையயடுத்து இவனின் மீது தற்போது வரை 7 புகார்கள் வந்துள்ள நிலையில், மேலும் பல புகார்கள் வரும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
cudallore culprit arrested by police cheated girl profile