சிதம்பரம்: கள்ளக்காதலால் பறிபோன உயிர்.. போதையில் கொலை செய்து பிணத்துடன் பாலியல் உறவு.!
Cudallore Chidambaram Affair girl Sathya Murder By Murasoli Maran Police Investigation
கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் புவனகிரியில் உள்ள கடலூர் - சிதம்பரம் பிரதான சாலையில் ஆடிட்டர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கீழ் தளத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக புதுச்சேரி பகுதியை சேர்ந்த சத்யா என்ற 36 வயது பெண்மணி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அங்குள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்துள்ளனர். இதில், கடந்த 29 ஆம் தேதி சத்யா தனது ஆண் நண்பருடன் அங்கு வந்த நிலையில், பின்னர் அதிகாலை நேரத்தில் அவரது ஆண் நண்பர் மட்டும் வெளியே செல்லும் வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து கேமராவில் பதிவான மர்ம நபர் தொடர்பான விசாரணையில், தரசூர் கிராமத்தை சேர்ந்த 29 வயது இளைஞரான முரசொலி மாறன் என்பவர் என்பதை கண்டறிந்துள்ளனர். இவர் தலைமறைவாகிய நிலையில், இவரின் அலைபேசி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் இருப்பதாக சிக்னல் காண்பித்துள்ளது.
இதனால் தனிப்படை காவல்துறையினர் அவிநாசிக்கு விரைந்து சென்று முரசொலி மாறனை கைது செய்த நிலையில், அங்கிருந்து சிதம்பரத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்துள்ளனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த ஐந்து வருடத்திற்கு முன்னதாக புதுச்சேரியில் தொழிற்சாலை ஒன்றில் சத்யாவும் - முரசொலி மாறனும் பணியாற்றி வந்தபோது, இவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது.
தற்போது சத்யாவின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், அவ்வப்போது இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று முரசொலி மாறனை தேடிச்சென்ற சத்யா, அலுவலகத்தில் யாரும் இல்லாததால் தனிமையாக இருந்துள்ளனர். அந்த நேரத்தில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சத்யா வற்புறுத்தவே, போதையில் இருந்த முரசொலி மாறன் சத்யாவிடம் கடுமையாக பாலியல் ரீதியாக அத்துமீறி கொலை செய்துள்ளான்.
பின்னர் அவரை அடித்து கொலை செய்து, உடலை கீழே உள்ள தரைத்தளத்தில் வைத்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. மேலும், பிரேத பரிசோதனையில் சத்யாவின் மரணத்திற்கு பின்னரும், கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சத்யாவின் கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், அவருக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Cudallore Chidambaram Affair girl Sathya Murder By Murasoli Maran Police Investigation