அஸ்வின் குடும்பத்திற்கு இப்படியொரு சோகமா?.. அஸ்வினின் மனைவி பதிவிட்ட ட்விட்.. சோகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்தினரில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய அணியின் கிரிக்கெட் வீரராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போது ஐ.பி.எல் போட்டி தொடரில் விளையாடி வந்தார். இந்நிலையில், அஸ்வினின் மனைவி ப்ரீத்தி ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார். 

இது தொடர்பான ட்விட்டர் பதிவில், " கடந்த ஒரு வாரத்தில் தங்களது குடும்பத்தில் பெரியவர்கள் 6 பேருக்கும், குழந்தைகள் 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் வெவ்வேறு வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். 

கொரோனா வைரசை எதிர்கொள்ள ஒரே ஒரு வழி தடுப்பூசி மட்டும் தான். உடல் வலிமையை விட மன வலிமையும் கொரோனாவை எதிர்கொள்ள கட்டாயம் தேவை. கொரோனா பாதிக்கப்பட்ட எனக்கும் முதல் 5 முதல் 8 நாட்கள் மோசமானதாக இருந்தது " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cricketer Ravichandran Ashwin Family Members 10 Person Test Positive Corona Virus


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->