நாட்டு வெடிகுண்டை கடித்து துடிதுடித்து உயிரிழந்த பசு.. சத்தியமங்கலத்தில் சோகம்.!!
Cow died try to ate Country bomb police investigation in Sathyamangalam Erode
சத்தியமங்கலம் தாளவாடி பகுதியில் மாடு புற்களை மேய்ந்துகொண்டு இருந்த மாடு, நாட்டு வெடிகுண்டை கடித்து உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் தாளவாடி திகினாரை கிராமத்தை சார்ந்தவர் ராமசாமி. இவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவரது தோட்டத்தில் ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கால்நடைகளை ராமசாமி மேய்த்து வந்த நிலையில், அங்குள்ள குட்டைக்கு அருகே காட்டுப்பன்றியை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்தது.
இதனை மாடு கடித்த நிலையில், குண்டு வெடித்து சிதறி மாடு படுகாயம் அடைந்தனர். இதில் மாட்டின் வாய்ப்பகுதி சேதமடைந்து, சில மணிநேரத்திற்கு பின்னர் துடிதுடித்து உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் சிறுவர்கள் வழக்கமாக விளையாடும் இடமும் இருப்பதால், அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் வெடிகுண்டுகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் அப்பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர். நாட்டு வெடிகுண்டை வைத்திருந்த மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Cow died try to ate Country bomb police investigation in Sathyamangalam Erode