ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு., தீயில் கருகி தம்பதி உயிரிழப்பு..!! மதுரையில் நடந்த சோகம்...!! - Seithipunal
Seithipunal


ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தம்பதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், ஆனையூர் பகுதியில் வசித்து வருவர் சக்திகண்னன். இவருக்கு திருமணமாகி சுபா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். 

இந்நிலையில், சம்பவதன்று தம்பதிகள் இருவரும் தங்கள் அறையில் உறங்கி கொண்டிருந்தனர். அப்போது அறையில் உள்ள ஏசியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அறை முழுவதும் புகை பரவியதால் இருவரும் வெளியே வர முயற்ச்சித்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக இருவர் உடலிலும் தீ பற்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கீழ் அறையில் இருந்த குழந்தைகள் இருவரும் சத்தம் கேட்டு வந்த போது பெற்றோர் உடலில் தீ பற்றியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் அறையில் பற்றி இருந்த தீயை அணைத்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறங்கி கொண்டிருந்தவர்கள் ஏசியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Couple killed in power outage in AC Near Madurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->