இறப்பிலும் இணைபிரியா தம்பதி.. கணவன் இறந்த துக்கத்தில் மனைவி பலி..!
Couple Death in Thiruvannamalai
கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சவுந்தரராஜன் . இவருக்கு திருமணமாகி அழகு திருமலை முத்தம்மாள் என்ற மனைவியும் சுருளிராஜன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சவுந்தராஜனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது, அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கணவன் இறந்த துக்கத்தில் இருந்த அவரது மனைவி அழகு திருமலை முத்தம்மாள் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இறப்பிலும் இணை பிரியாமல் தம்பதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியி நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Couple Death in Thiruvannamalai