குன்னம் ஏஇஓ அலுவலகத்தில் முறைகேடு.! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் வேப்பூர் ஏஇஓ அலுவலகத்தில் எழுத்தராக தமிழ்ச்செல்வன் என்பவர் இருந்துள்ளார். இவர்  தற்போது ஓய்வு பெற்று விட்டார். ஆனால், இவர் பணியில் இருந்தபோது பல மோசடிகள் நடந்துள்ளது தற்பொழுது தெரியவந்துள்ளது.

ஆசிரியர்களின் வைப்பு நிதியிலிருந்து (GPF) கடனுதவி பெற்று தரும் போது, மாவட்ட கருவூலத்திலிருந்து ஆசிரியர்களுக்கு செலுத்தும் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்து மோசடி செய்துள்ளார். இதுகுறித்து கேள்விப்பட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து ஏஇஓவிடம் முறையிட அவர், பணத்தை பெற்று தருவதாக வாக்களித்துள்ளார். 

இருப்பினும் அவர் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என ஆசிரியர்கள் சிஇஓ அருளரங்கனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சிஇஓ, தமிழ்ச்செல்வன் மற்றும் ஏஇஓ விடம் விசாரணை நடத்த துறை ரீதியாக உத்தரவிட்டுள்ளார். பின்னர் 9 லட்சங்கள் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், முழு தொகையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corruption in perambalur vepur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->