சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழப்பு.!!
Coronavirus patient death in Chennai
தமிழகத்தில் நேற்று மட்டும் கோவிட்-19 தொற்று 580 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,409 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வரை கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,822. சென்னையில் நேற்று மட்டும் 316 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 31-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இதுவரை 1547-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கோவிட்-19 க்கான ரத்த பரிசோதனை நேற்று மட்டும் 14,102 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவிட்-19 க்கான ரத்த பரிசோதனை இதுவரை 1,92,574 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழப்பு. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்து வந்த 56 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
English Summary
Coronavirus patient death in Chennai