#Breaking: 25,872 பேருக்கு கொரோனா உறுதி.. பலி எண்ணிக்கை 208 ஆக உயர்வு.!!
Corona virus update tamilnadu 3 June 2020
தமிழகத்தில் கரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அரசின் சார்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 24,586 ஆக உயர்ந்துள்ளது. பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 13,706 ஆக இருந்தது.. மேலும், மொத்த பலி எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இன்று கரோனாவால் 1,286 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது. இன்று 610 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 14,316 ஆக உயர்ந்துள்ளது. இன்று 11 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 16,585 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 1.012 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,598 ஆக உயர்ந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Corona virus update tamilnadu 3 June 2020