#Breaking: 5994 பேருக்கு இன்று கொரோனா.. தப்பித்த சென்னை.. சிக்கிய மாவட்டங்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா பரவலின்  காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

நேற்றுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 2,90,907 பேருக்கு கொரோனா உறுதியானது. மேலும், 2,32,618 பேர் பூரண நலன் பெற்று இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். 4,806 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று கொரோனாவால் 5,994 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6,020 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 2,38,638 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 119 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,927 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலில், சென்னையில் நேற்றுவரை 1,08,124 கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆக இருந்தது. இன்று மேலும் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,117 ஆக உயர்ந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona virus update 9 August 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->