மின்னல் வேகத்தில் வைரஸ் பரவுகிறது.. எச்சரிக்கை விடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்.!!
corona virus spread in tamilnadu likes a thunder
சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் சுமார் 195 க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த வைரஸின் தாக்கத்திற்கு தற்போதுவரை 378,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,510 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது.
இந்தியா முழுவதிலும் கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த வைரஸால் இந்தியாவில் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரோட்டில் இரண்டு பேருக்கு கரோனா அறிகுறி உறுதியான நிலையில், மதுரையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சேலத்தில் 19 பேர் கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதியாகி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் கரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருவதாகவும், இதனால் மக்கள் அரசின் விதிமுறைகளை கட்டாயம் பின் பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை கூறுவதை விட்டுவிட்டு, தங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள் என்று கூறியுள்ளார். இந்த நேரத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோருக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
corona virus spread in tamilnadu likes a thunder