இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கரோனா உறுதி.. அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவையும் தாக்கியுள்ள கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

தினமும் இதனால் பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலையில், தமிழக அரசு தேவையான அனைத்து முயற்சியையும் முழு வீச்சில் எடுத்து வருகிறது. டெல்லி மாநாட்டிற்கு சென்ற நபர்களுக்கு அதிகளவு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

டெல்லி மாநாட்டிற்கு சென்ற நபர்கள் குறித்த விபரத்தை சேகரித்து, இவர்களின் குடும்பத்தினரையும் சோதனை செய்து வரும் நிலையில், அடுத்தடுத்து கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரிப்பது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது இன்று மேலும் 102 பேருக்கு கரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona virus positive symptoms


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->