சற்றுமுன்: தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி..! - Seithipunal
Seithipunal


சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸானது உலக நாடுகளில் பரவி அனைத்து மக்களையும் அச்சத்தில் நடுங்க வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

ஈரானிலிருந்து லடாக் வந்த இரண்டு பேருக்கும், ஓமனில் இருந்து இந்தியாவிற்கு வந்த தமிழர் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவர்கள் 3 பேரின் உடல்நிலை சீராக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சஞ்சீவகுமார் தெரிவித்திருந்தார்.

மேலும் ஓமன் நாட்டில் இருந்து தமிழகத்திற்கு திரும்பி 45 வயதுடைய பொறியாளருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அவர் தனிமைப்படுத்தி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில், மலேசியாவில் இருந்து கோவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதால், அந்த நபரை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona virus in kovai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->