கொரோனா வைரஸ் : கடலூர் மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்!
corona virus cuddalore district collector announcement
10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணி புரியும் வணிக வளாகங்களை மூட கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையின்படி கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் வைரஸ் நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கல்வி நிறுவனங்கள் பூங்காக்கள் திரையரங்குகள் மதுபானக் கூடங்கள், பிச்சாவரம் மற்றும் இதர சுற்றுலா தலங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக அத்தியாவசிய பொருட்களான உணவு பால் மருந்து போன்ற நிறுவனங்களைத் தவிர்த்து 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணி புரியும் வணிக வளாகங்களை 31 3 2020 வரை மூடி வைக்குமாறு அனைத்து வணிகர்களும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரையாகும் வேண்டுகோளாகும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொரோனா வைரஸ் பரவாமல தடுக்க கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தடுப்பு நடவடிக்கைகளை, கடலூர் மாவட்டத்தில் துரிதப்படுத்த கோரி கோரிக்கை வைத்திருந்த்னர் என்பது குறிப்பிடத்தக்கது
English Summary
corona virus cuddalore district collector announcement