கொரோனா தடுப்பூசி போட்ட 447 பேருக்கு லேசான பக்கவிளைவு.! 3 பேர் மருத்துவமனையில் அனுமதி.!
CORONA VACCINE SIDE EFFECT
நாடு முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக போடும் பணி தொடங்கியது. தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி நேற்று காலை 10.30 மணிக்கு இந்த தடுப்பூசி போடும் பணியை தொடக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி மதுரையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடக்கி வைத்தார். நாடு முழுவதும் 3000 மையங்களிலும், தமிழகத்தில் 166 மையங்களிலும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.
நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், 447 பேருக்கு லேசான பக்கவிளைவு ஏற்பட்டதாகவும், மூன்று பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை தேவைப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
CORONA VACCINE SIDE EFFECT