இறந்தவர் பெயரில் கொரோனா தடுப்பூசி சான்று... அதிர்ச்சியில் குடும்பத்தினர்..! - Seithipunal
Seithipunal


இறந்தவர்  செல்போனுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திய குறுஞ்செய்தி வந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், வில்வமரத்துப்பட்டியை சேர்ந்த ராஜப்பா(வயது 72. இவர் கடந்த் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டார். இவர் உடல்நல குறைவு காரணமாக மே மாதம் உயிரிழந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அவரது செல்போனுக்கு, அவர் கொரோனா தடுப்பூசி 2-வது தவணை செலுத்திக்கொண்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனை கண்டு அதிர்ந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவதுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் , இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கணினியில் பதிவேற்றம் செய்யும்போது கூட வேறு பெயர் தவறுதலாக பதிவு செய்யப்பட்டு இருக்கலாம்  எனவும் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona vaccine certificate in the name of the deceased


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->