நாடு முழுவதும் இன்று இரண்டாவது கட்டமாக ஒத்திகை.! தமிழகம் வந்த மத்திய அமைச்சர்.!
corona vaccine 2nd rescale
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை கடந்த ஜனவரி 2ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இரண்டாவது கட்டமாக ஒத்திகை நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தடுப்பூசி ஒத்திகை முதல் கட்டமாக சென்னை, கோவை, நீலகிரி, திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் நடைபெற்றுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று (8.1.2021) ஒத்திகை நடக்கவுள்ளது. 190 இடங்களில் இன்று ஒத்திகை நடைபெற உள்ளது. இந்த ஒத்திகையை மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் இன்று காலை சென்னையில் ஆய்வு செய்து வருகிறார்.
இன்று காலை தமிழகம் வந்த மந்திரி ஹர்ஷ்வர்தன், தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியை சந்தித்து பேச உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
corona vaccine 2nd rescale