#Breaking: கொரோனா எதிரொலி., அடுத்த அதிரடியில் இறங்கிய தமிழக அரசு.! சற்றுமுன் வெளியான அறிவிப்பு.!
corona issue tn govt new action
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோரோனா கண்காணிப்பு குழுக்களை அமைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிவரை தமிழகத்தில் கொரோனா கட்டுப்பட்டு வழிமுறைகளில் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நாட்டில் நாளுக்குநாள் கொரோனா பரவும் தாக்கத்தை கருத்தில் கொண்டு, கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன், ஏப்ரல் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோரோனா தடுப்பு கண்காணிப்பு குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோரோனா கண்காணிப்பு குழுக்களை அமைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் தலா ஒரு குழு வீதம் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் கொண்ட இந்த கண்காணிப்பு குழு தமிழக அரசால் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
corona issue tn govt new action