சென்னைக்கு நல்ல செய்தி! நம்பிக்கையில் சென்னை வாசிகள்!
corona down in chennai
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைய தொடக்கி இருப்பது சென்னை வாசிகளுக்கு நம்பிக்கையை உண்டாக்கி உள்ளது.
மாா்ச், முதல் ஜூன் மாதவரை சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்தது. இந்த 4 மாதங்களில் மட்டும் கொரோனா தொற்று 80 ஆயிரத்தைக் கடந்தது. நாளொன்றுக்கு சராசரியாக 1700 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதத்தில் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை சராசரியாக 1200 ஆக குறைந்தது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 க்கும் கீழ் என்ற நிலை வந்துள்ளது கோராவுக்கு எதிரான போராட்டத்தில் சென்னை வாசிகளுக்கு நம்பிக்கை உண்டாகியுள்ளது.
சென்னையில் மொத்தமாக பாதிக்கப்பட்ட 1லட்சத்து 7,109 பேரில், 93,231 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். தற்போது 11,606 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தோா் எண்ணிக்கை 2,272-ஆக உயா்ந்துள்ளது.
சென்னையில் 87% பேர் குணமடைந்துவிட்டனர். 2.12 சதவீதம் பேர் மரணம் அடைந்துள்ளனர். 11% பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.