தமிழகம் வந்த மேலும் இருவருக்கு கொரோனா! எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு!
corona attacked persons count increased in tamilnadu
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மூன்று பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இன்றும் மூன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று வந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த இருவர், நியூசிலாந்தில் இருந்து வந்த ஒருவர் என மூன்று பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று ஸ்பெயினில் இருந்து வந்த ஒரு பயணிக்கும், கலிபோர்னியாவில் இருந்து வந்த 65 வயது பெண், துபாயில் இருந்து வந்த 43 வயது ஆண் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
ஒருவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்க, ஒருவர் திருநெல்வேலியில் சிகிச்சையில் இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் உடல்நிலையும் சீராக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்த்துள்ளார்.
English Summary
corona attacked persons count increased in tamilnadu