மீண்டும் நித்யானந்தா சர்ச்சை பதிவு..!
Controversy posted on Nithyananda's Facebook page
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நித்யானந்தாவை மதுரை ஆதீன மடத்தின் 293 வது மூன்றாவது மடாதிபதியாக கடந்த 2012 ம் ஆண்டு நியமித்தனர். பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் சிறிது நாட்களில் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 13 தேதி அன்று மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரி நாதர் உடல் நல குறைவால் காலமானார். அருணகிரி நாதரால் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டிருந்த, திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி 293 மடாதிபதியாக பொறுப்பெற்றுகொண்டு பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் நித்யானந்தா 293 வது மடாதிபதியாக பொறுப்பெற்று கொண்டதாக முகநூல் பக்கதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், மறைந்த பீடாதிபதி அருணகிரி நாதருக்கு தேவையான சாஸ்திர, சம்பிராதங்களை கைலாசாவில் இருந்தே செய்து விட்டதாகவும் ஆன்மீக மடத்தின் 293 பீடாதிபதியாக பொறுப்பேற்று கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அவர் இளைய பீடாதிபதியாக நியமித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அதில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Controversy posted on Nithyananda's Facebook page