வாகனம் மோதியதில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு
Container lorry driver killed in collision with vehicle
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாகன மோதிய விபத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாலக்கோடி பகுதியை சேர்ந்தவர் ஓட்டுநர் கதிர்வேல். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையிலிருந்து கன்டெய்னர் லாரியில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் சென்றபோது கண்டெய்னர் லாரி பழுதடைந்தது. இதனால் ஓட்டுநர் கதிர்வேல் லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, கீழே இறங்கியுள்ளார். அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கதிர்வேல் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த கதிர்வேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Container lorry driver killed in collision with vehicle