சேலம்: மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் கோட்டக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருடைய மகன் கட்டிட தொழிலாளி பிரேம்குமார் (30). இவர் சிவாதபுரம் பகுதியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது பிரேம்குமார் இரும்பு கம்பியை உயர்த்திப் பிடித்தபோது எதிர்பாராத விதமாக உயர் மின்னழுத்த காம்பின் மீது உரசியதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதில் பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பிரேம் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Construction worker dies due to electric shock in salem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->