டிடிவி தினகரனை வைத்து அரசியல் வியூகம் செய்யும் காங்கிரஸ் திமுக கூட்டணி!! ஆனாலும் பொதுமக்களின் மனநிலை!!
congress plan in Sivagangai
தமிழகத்தில் மக்களவை தேர்தலும், காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலும் அடுத்த மாதம் 18-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அணைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
தற்போது தமிழகத்தில் அதிமுகவுடன் இணைந்திருக்கும், பாமக, பாஜக, தேமுதிக கூட்டணி பலம்வாய்ந்த கூட்டணியாக இருப்பதால் எதிர்க்கட்சியான காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிப்பது கடினமாகத்தான் இருக்கும் என்பதை அக்கட்சியினரே உணர்வதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் டிடிவி தினகரனின் அமமுக- வும் அணைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். டிடிவி தினகரணக்கும் ஓரளவுக்கு மக்களின் ஆதரவு இருப்பதாக அமமுக-வினரே சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பகிர்ந்துவருகின்றனர். ஆனாலும் வெற்றிபெறும் கூட்டணி அதிமுகவே இருப்பதாக கூறிவரும் நிலையில், காங்கிரஸ் திமுக கூட்டணி தினகரனின் பெயரை சொல்லி ஓட்டுகளை பிரித்துவிடலாம் என்ற கனவில் இணையத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி உள்ளது. அங்கு போட்டியிடும் பாஜக வேட்பார் எச்.ராஜாவிற்கு அதிக வாக்குகள் இருக்கின்றது என்பதை உணர்ந்த காங்கிரஸ் கட்சியினர். தினகரனுக்கு பாஜக எதிர்ப்பாக உள்ளது எனவே காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என கூறி வாக்கு சேகரிக்கின்றனர். ஆனாலும் சிவகங்கை தோகுதியில் கட்சியையும் தாண்டி எச் ராஜாவிற்கு ஆதரவு இருப்பதால் காங்கிரஸ் கட்சி நினைப்பது பகல் கனவாகவே போய்விடும் என கூறுகின்றனர் சிவகங்கை தொகுதி மக்கள்.
English Summary
congress plan in Sivagangai