இரயிலில் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 61 வயது கிழவன்.. நையப்புடைத்த மக்கள்.! - Seithipunal
Seithipunal


சென்னையை சார்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை, கோயம்புத்தூரில் இருக்கும் உறவினரை காணுவதற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு அதிவிரைவு இரயிலில் புறப்பட்டுள்ளார். 

இந்த இரயில், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் காட்பாடி இரயில் நிலையத்திற்கு அருகே சென்ற போது, பெண்மணியுடன் முதியவர் பயணம் செய்துள்ளார். இந்நிலையில், காமுக எண்ணம் கொண்ட முதியவர் பெண்மணிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த பேராசிரியை கூச்சலிடவே, அங்கிருந்த பொதுமக்கள் காமுக வயோதிகரை நையப்புடைத்து காட்பாடி இரயில் நிலைய காவல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து முதியவரிடம் விசாரணை செய்கையில், அவர் கோயம்புத்தூரில் உள்ள ஒண்டிப்புதூர் பகுதியை சார்ந்த சுரேஷ் (வயது 61) என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுரேஷ் தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College women Professor Sexual Torture by Old Man during Train Travelling


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->