காரில் சென்ற 7 கல்லூரி மாணவர்களுக்கு காலையிலேயே நடந்த பயங்கர விபத்து.! சம்பவ இடத்திலேயே துடி துடித்த பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் அவிநாசி அருகே நடந்த விபத்தில், 5 கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

சிமெண்ட் லாரி – கார் மோதிக்கொண்ட விபத்தில், 5 கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

சேலம் விநாயகா மிஷன் குழுமத்திற்கு சொந்தமான பாரா மெடிக்கல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் ஏழு பேர், காரில் சேலத்தில் இருந்து உதகைக்கு சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பழங்கரை பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் எதிரே வந்த சிமெண்ட் லாரி மீது சார் மோதியது. 

இந்த விபத்தில், கார் நொறுங்கி அதில் பயணம் செய்த 7 மாணவர்களில் 5 பேர் மற்றும் கார் ஓட்டுனர் ஆகியோர் விபத்து நடந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college students car accident in thirupur avinasi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->