வகுப்பறையில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவன்!! சோகத்தில் மூழ்கிய சக மாணவர்கள்!!
college student suicide in class room
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு பயின்று வந்த தமிழக மாணவர் ரிஷி ஜோஷ்வா என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷி ஜோசுவா என்ற மாணவர் எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு பயின்று வந்தார். அவர் நேற்று காலை கல்லூரி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தூக்கில் தொங்கி தற்கொலை செய்த தமிழக மாணவர் ரிஷி ஜோஷ்வா மன அழுத்தம் காரணமாக வகுப்பறையிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர் ரிஷி ஜோஷ்வாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக டெல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மாணவர் ரிஷி ஜோஷ்வாவை நேற்று மாலை முதல் காணவில்லை என கல்லூரி நிர்வாகம் தரப்பில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும், தற்கொலை செய்வதற்கு முன் ரிஷி ஜோஷ்வா தன்னுடைய பேராசிரியருக்கு ஈ மெயில் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்,விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
English Summary
college student suicide in class room