தனிமையில் இருந்த கல்லூரி மாணவர் செய்த செயல்! கதவை திறந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
college student suicide at home
சிவகங்கையில் உள்ள மழவராயனேந்தல் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் கார்மேகத்தின் மகன் செல்வா. இவர் மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற அவர் மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த பெற்றோர்கள், செல்வா மயங்கிக் கிடப்பதை பார்த்து உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். எதற்காக செல்வா தற்கொலை செய்து கொண்டார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college student suicide at home