பரோட்டா சாப்பிட்டதால் இளைஞர் உயிரிழப்பா?.! விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை..!!
College Student Dead Near Korattur
பரோட்டா சாப்பிட்டு தூங்கிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைம், கொரட்டூர் பகுதியில் வசித்து வருபவர் அரியகுட்டி. இவருக்கு சிபி சங்கமித்ரன் என்ற மகன் இருக்கிறான். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று இரவு அவரின் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டின் அருகில் உள்ள கடையில் பரோட்டா சாப்பிட்டுள்ளார். இதனை அடுத்து அதிகாலை 3 மணிக்கு சிபி சங்மித்ரனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது
உடனே அவரது பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதபரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகு தான் பரோட்டா சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என முழுமையான விபரம் தெரியவரும்.
English Summary
College Student Dead Near Korattur