தஞ்சாவூர் : மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
College Student Commites Suicide In Thanjavur
மருத்துவ கல்லூறி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் நடராஜன் நகர் பகுதியில் வசித்து வருபவர் மோகன்ராஜ். இவரின் மகள் அனுஸ்ரீ (19) சேலம் மருத்துவகல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த அவர் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.
104
044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)
022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.
English Summary
College Student Commites Suicide In Thanjavur