காதலிக்க மறுத்த பெண்ணுக்கு சரமாரி வெட்டு! ஒருதலை காதலால் ஏற்பட்ட விபரீதம்! - Seithipunal
Seithipunal


காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை வீடு புகுந்து கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அருகே உள்ள மங்கூன் கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி என்ற மாணவி, இவர் தனியார் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

மகாலட்சுமியின் வீட்டிற்கு வெல்டிங் வேலைக்கு சென்ற அரியலூர் மாவட்டம் பொய்யூரை சேர்ந்த சுதாகர் என்ற இளைஞர் மகாலட்சுமி மீது காதல் வயப்பட்டுள்ளார். 

ஆனால்வெல்டர் சுதாகரின் காதலை ஏற்க மகாலட்சுமி மறுத்துள்ளார். இருந்தாலும் விட்டுவிடாமல் தொடர்ந்து தன்னை காதலிக்கும் படி மகாலட்சுமியை சுதாகர் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

சுதாகரின் தொல்லை தாங்க முடியாமல் பெரம்பலூர் எஸ்.பி அலுவலகத்திலும் அண்மையில் மகாலட்சுமி புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததாக கூறப்படும் நிலையில், கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மகாலட்சுமியை பின் தொடர்ந்து சென்ற சுகாதர், அவரது வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து வீடு புகுந்து தன்னை காதலிக்கும் படி தெரிவித்துள்ளார்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் படி மகாலட்சுமி சுதாகரிடம் கோபமாக கூறியதால் ஆத்திரம் அடைந்த சுதாகர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகாலட்சுமியின் கழுத்து மற்றும் கைகளில் அறுத்துவிட்டு தப்பியுள்ளார். இதையடுத்து அக்கபக்கத்தினர் மகாலட்சுமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college girl attack for one side love


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->