கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
collecter holiday announcement for rain
வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது அன்று முதல் கடந்த வாரம் வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வந்தது.
இந்தநிலையில், தருமபுரி மாவட்டத்தில் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், தருமபுரி மாவட்டத்தில் இரவு முதல் கனமழை பெய்வதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கல்லூரிகள் வழக்கம் போல என தெரிவித்துள்ளார்.
அதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது. இது தொடர்பாக அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட அறிக்கையில், கனமழை பெய்வதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகி, தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
English Summary
collecter holiday announcement for rain