தாய்மாமன் செய்த செயலால் விரக்தியடைந்த கல்லூரி, மாணவி தூக்குபோட்டு தற்கொலை.!  - Seithipunal
Seithipunal


சென்னை கீழ்கட்டளை துரைராஜ் நகரில் மதுமிதா என்ற பெண் தன்னுடைய தாய் மாமன் வீட்டில் இருந்தவாறு நுங்கம்பாக்கத்தில் இருக்கும் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக அவர் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். 

மதுமிதாவுக்கு அதிகமாக செல்போன் உபயோகிக்கும் பழக்கம் இருந்துள்ளது. எப்பொழுதும் செல் போனில் கேம் விளையாடுவது சேட்டிங் செய்வது அல்லது நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்று இருந்துள்ளார். இதனை மதுமிதாவின் தாய்மாமன் கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் கேட்கவில்லை. எனவே ஆத்திரமடைந்த தாய்மாமன் மதுமிதாவின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டுள்ளார். 

இதன் காரணமாக விரக்தியுடன் இருந்த மதுமிதா வீட்டில் யாருடனும் பேசாமல் தனித்து இருந்துள்ளார். கடந்த 26ஆம் தேதி அவர் குளிப்பதற்காக குளியலறைக்குள் சென்று நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அவருடைய தாய் மாமன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கி உள்ளார். 

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் மதுமிதா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். செல்போன் மோகத்தால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

collage girl suicide in chennai for cellphone


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->