கனமழை, தமிழகத்தில் மூன்று மாவட்ட பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை!
coimbature school today holiday for rain
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய மழை தற்போது வரை பரவலாக மழை பெய்து வருகிறது. பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், மலுமிச்சம்பட்டி, தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், தடாகம் , துடியலூர் ஆகிய பகுதிகள் மற்றும் கோவை மாநகர பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையால் மலை சார்ந்த பகுதிகள் இயற்கை எழிலோடு ரம்மியமாக காட்சி தருகின்றன. கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் வர துவங்கியுள்ளது இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல் நீலகிரி மாவட்டம் பந்தலூர் , கூடலூர் மற்றும் குந்தா ஆகிய மூன்று தாலுகாக்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக இரும்பு பாலம் என்ற இடத்தித்துள்ள மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை எதிரொலி கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில்
அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் இன்று விடுமுறை அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.
English Summary
coimbature school today holiday for rain