சிறுமியை தேடி விரைந்த காதலன் கட்டையால் அடித்து கொலை.. பொள்ளாச்சியில் சம்பவம்.!!
Coimbatore youngster murder police investigate
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை அடுத்துள்ள சின்னாம்பாளையம் பகுதியை சார்ந்தவர் கவுதம். இவர் அங்குள்ள ஜவுளி கடையில் பணியாற்றி வந்த நிலையில், இந்த கடை வழியாக பள்ளி சென்று வந்த சிறுமிகளுக்கு காதல் வலை விரித்துள்ளான்.
இந்த வலையை அப்பகுதியை சார்ந்த 16 வயது சிறுமி விழவே, இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், காதல் வலையில் காமுகனின் எதிர்பார்ப்போடு விழுந்துள்ளார். இந்த சமயத்தில், ஊரடங்கு அமலான நிலையில், இருவரும் சந்திக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி இருவரும் அலைபேசியில் பேசிய நிலையில், வீட்டில் தான் மட்டும் தனியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து கவுதம் விரைவாக சிறுமியின் இல்லத்திற்கு செல்லவே, இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக சிறுமியின் தாய் இல்லத்திற்கு திருப்பிய நிலையில், இருவரும் கையும் களவுமாக மாட்டிக்கொண்டுள்ளனர். பின்னர் தாய் தனது கணவர் மற்றும் சகோதரருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இந்த தருணத்தில், சிறுமியின் சகோதரரும் வீட்டிற்கு வந்துள்ளார்.
சிறுமியின் மனதை கெடுத்து வாழ்க்கையை கேள்விக்குறியாக்க காத்திருந்த செய்தியை அறிந்த குடும்பத்தினர் கவுதமை அடித்து நொறுக்கவே, சம்பவ இடத்திலேயே கவுதம் உயிரிழந்துள்ளான். இதன்பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கவுதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதைக்காக அனுப்பி வைக்கவே, இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினரை கைது செய்துள்ளனர். பள்ளி படிக்கும் சமயத்தில் ஏற்பட்ட விபரீத காதலால், சிறுமியின் வாழ்க்கை கேள்விக்குறியாகி, அரங்கேறிய கொலை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore youngster murder police investigate