போதைக்காக வார்னிஷ் குடித்த தொழிலாளர்கள் துடிதுடிக்க உயிரிழந்த சோகம்.!! கோவையில் பரிதாபம்.!!
Coimbatore youngster died due to varnish
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி குரும்பாளையம் யூனிகாஸ்ட் அலாய்ஸ் என்ற இருசக்கர வாகன பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பல தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், சுரேஷ் மற்றும் உத்தர் ராஜ் என்பவர் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது ஊரடங்கு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், நிறுவனத்தில் இருக்கும் பெயிண்ட் தின்னர்களை மாற்று போதைக்காக அருந்த முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து இருவரும் தின்னரை குடித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் வயிற்று வலியால் துடித்த நிலையில், கடுமையான வயிற்றுப்போக்கால் அவதியுற்றுள்ளனர். இவர்களுக்கு என்ன நடந்து என்று கேட்டறிந்த உறவினர்கள் அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore youngster died due to varnish