கோவையில் பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம், நகைக்கொள்ளை தற்கொலை விவகாரம்.. விசாரணையில் அதிர்ச்சி திருப்பம்.!
Coimbatore Woman Sexual Abuse and Robbery issue Tragedy Turning Point Affair Man Drama with Woman
சோமனூரில் அழகுக்கலை நிபுணர் தற்கொலை செய்த வழக்கில், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட அவமானத்தால் தற்கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், விசாரணையில் பெரும் அதிர்ச்சி திருப்பமாக கள்ளக்காதல் விவகாரத்தால் காவல்துறை விசாரணைக்கு பயந்து தற்கொலை அரங்கேறியது தெரியவந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோமனூர் பகுதியைச் சார்ந்தவர் கங்காதேவி. இவர் பியூட்டி பார்லர் நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது கணவர் சென்று பார்க்கையில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கங்காதேவி மயக்க நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு விசாரித்தபோது, அழகு நிலையத்திற்கு வந்த 3 மர்ம நபர்கள் தனது கை கால்களை கட்டி போட்டு, தனது 19 சவரன் நகைகளை கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த 3 பேரும் சேர்ந்து கங்காதேவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்துகையில் கங்காதேவி தனது வீட்டிற்குச் சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முதலில் கொள்ளையர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்மணி அவமானத்தால் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், அழகு நிலையம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். இதன்போது அங்கு அடிக்கடி ஒரு நபர் வந்து சென்றதும், பாலியல் பலாத்காரம் நடைபெற்றதாக கூறும் தினத்திலும் அந்த ஒரு நபர் மட்டுமே வந்து சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து, கங்காதேவியின் செல்போனை ஆய்வு செய்கையில், ஊட்டியில் இருக்கும் நபருடன் அவர் அடிக்கடி பேசி வந்ததும், அவரின் அலைபேசி கடந்த சில நாட்களாக சோமனுர் பகுதியில் இருந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற நாளில் இருந்து ஊட்டிக்கு சென்றதும் தெரியவந்தது. ஊட்டிக்கு விரைந்து சென்ற தனிப்படை காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரித்துள்ளனர். விசாரணையில், அவர் மதுரையைச் சார்ந்த முத்துப்பாண்டியன் என்பது தெரியவந்தது.
மேலும், மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து சென்னையில் வாழ்ந்து வரும் முத்துப்பாண்டிக்கு, முகநூல் மூலமாக கங்காதேவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் முதலில் நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில், இதுவே பின்னாளில் கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. கள்ளக்காதலனை கோயம்பத்தூருக்கு அழைத்த கங்காதேவி, அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை வாங்கிக் கொடுத்து அங்கேயே தங்க வைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் நாம் இருவரும் சேர்ந்து எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்ட கள்ளக்காதல் ஜோடி, இந்த நகை கொள்ளை மற்றும் பாலியல் பலாத்கார நாடகத்தை அரங்கேற்ற உள்ளது. இந்நிலையில், மூன்று பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை கொள்ளை அடித்து சென்றதாக கணவனிடம் கூறினால், அவர் அவமானத்தால் வெளியே ஏதும் சொல்ல மாட்டார் என்று நினைத்த கங்காதேவிக்கு காவல்துறையினர் விசாரணை தொடங்கியதும், நாம் மாட்டிக் கொள்வோம் என்ற பயம் தென்பட்டுள்ளது.
இதனையடுத்து வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். நகைகளை வாங்கிக் கொண்டு விடுதி அறையில் இருந்த முத்துப்பாண்டியையும் காவல் துறையினர் கைது செய்த நிலையில், இந்த சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது. முகநூல் என்ற முட்டுச்சந்தில் இளம் பெண்கள், திருமணமான பெண்கள் முறை தவறிய காதலில் அல்லது பருவ காதலில் விழுந்தால் அது எந்த மாதிரியான விபரீதத்தில் கொண்டு சென்று சேர்க்கும் என்பது இந்த சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Coimbatore Woman Sexual Abuse and Robbery issue Tragedy Turning Point Affair Man Drama with Woman